சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய மூன்று சந்தேகநபர்கள், அகழ்வாராய்ச்சி உபகரணங்களுடன் தெஹியத்தகண்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்க கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், தெஹியத்தகண்டிய - முவகம்மன பகுதியில் நேற்று (01) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 24, 27 மற்றும் 37 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் அக்குரஸ்ஸ, போகஸ்வெவ மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெஹியத்தகண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்





