யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியபகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தீ விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாநகர சபை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் அணைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
தீ பரவலுக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.





