மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 76 வயதுடைய விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார் .

 


மட்டக்களப்பு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு காவல்துறையின் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம்  மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஈரளக்குளம் – நவுண்டலியாமாடு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு - மாவடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின்76 வயதுடைய  தந்தையான ஆறுமுகம் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.