முல்லைத்தீவில் 19 வயது யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார்

 


முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பகுதிக்குட்பட்ட சிவதர்சன் தமிழ்வினி என்ற 19 வயது பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், இதுவரையில் குறித்த பெண் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, பெண் தொடர்பில் விவரங்கள் தெரிந்தவர்கள் 0766859799 மற்றும் 0773104228 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புக் கொள்ளலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.