ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது

 


ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மஜித் காதிமி, திங்களன்று நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக, கூடுதல் விவரங்கள் எதையும் வெளியிடாமல் ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல், காதேமியைத் தாக்கியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உறுதிப்படுத்தினார். 

இன்றைய தினம்  ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 25 பேரில் காதேமியும் ஒருவர்.

 காதிமி உட்பட மொத்தம் 25 பேர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

"புரட்சிக் காவலர்கள் பொதுமக்களை நோக்கிச் சுட்டுக்கொண்டிருக்கிறார்கள், நாங்கள் பயங்கரவாதிகளின் தலைவர்களை ஒழித்து வருகிறோம்," என்று காட்ஸ் கூறினார். 

"ஈரானின் தலைவர்கள் தாங்கள் குறிவைக்கப்படுகிறோம் என்ற உணர்வுடன் வாழ்கிறார்கள். நாங்கள் அவர்களை ஒவ்வொருவராகத் தொடர்ந்து வேட்டையாடுவோம்," என்றும் அவர் மேலும் கூறினார்.


ஈரான் வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள இலக்குகள் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளையும் ஏவியது. 


போர் தொடங்கியதிலிருந்து, பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி மற்றும் காவலர் படையின் தலைமைத் தளபதி முகமது பக்பூர் உட்பட பல மூத்த ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.