கல்முனை
மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்கல்வி பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும்
40 மாற்றுத் திறனாளிகளுக்கு மென்திறன் பயிற்சி இன்ஞ (8) புதன் கிழமை
நிலையப் பணிப்பாளர் ரி.இளையராஜா தலைமையில் வழங்கப்பட்டது.
பயிற்சி
பட்டறை அங்குரார்ப்பண நிகழ்வில் நைட்டா நிறுவன பயிற்சி அதிகாரி க.செல்வ
பிரகாஷ் , ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா,
விவேகானந்தர் தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி நிறைவேற்றுப்பணிப்பாளர்
கே.பிரதீஸ்வரன் அகிலாஸ் பவுண்டேஷன் பணிப்பாளர் டாக்டர் நொயல் உள்ளிட்ட
வளவாளர்கள் கலந்து கொண்டார்கள்.
பயனாளர்களுக்கு நைட்டா சீருடை வழங்கப் பட்டது.
( வி.ரி.சகாதேவராஜா)














