மனித - யானை மோதல்கள் காரணமாகப் பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து செல்கிறது.

 


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதல்களில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

எப்பாவல, கெலேஅமுணுகொலய பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, ஹரிகஸ்வெவ மற்றும் தணமல்வில ஆகிய பகுதிகளிலும் காட்டு யானைத் தாக்குதலில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் மனித - யானை மோதல்கள் காரணமாகப் பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.