மட்டக்களப்பு ஆயித்தியமலையில் யானை தாக்கி ஒருவர் பலி!!













 மட்டக்களப்பு  ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள கம்பனிவட்டை வயற்பிரதேசத்தில் காட்டு யானையின்  தாக்குதலில் 68 வயதான வயோதிபர் உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் 31.03.2026 நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வவுணதீவு - தாண்டியடி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை கந்தசாமி என்பவரே உயிழந்தவரென அடையாளங்காணப்பட்டுள்ளது.

கூலித் தொழிலாளியான இவர் கடந்த இரண்டு வருடகாலமாக நெல் வயல் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுவந்துள்ளார்.

சம்பவ நேரம் காட்டு யானை வயல் வாடியிலுள்ள நெல் மூடையினை உட்கொண்டதை அவதானித்து இவர் யானையை விரட்ட முற்பட்டவேளை அந்த யானை இவரை தாக்கிய பின்னர்  தூக்கிவீசியுள்ளது. இவரது சடலம் வயல்வெளியில் சேற்றில் புதைந்து காணப்பட்டது.
திடீர் மரணவிசாரணையதிகாரி எம்.எஸ்.எம். நசீர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

ஆயித்தியமலை  பொலிஸார் இச்சம்பவம் குறித்து குடும்ப உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.