மட்டக்களப்பு புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டிய 04சந்தேக நபர்கள் அதிரடியாக கைது .

 


மட்டக்களப்பு - கரடியனாறு புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட  விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உட்பட 4 சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள பெரிய புல்லுமலை பிரதேசத்தில் இன்று (11.04.2026 ) கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து  பெரிய புல்லுமலை பிரதேசத்தில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

 இதன்போதே, சந்தேக நபர்களிடமிருந்து பூஜை பொருட்கள், புதையல் தோண்டும் உபகரணங்கள் மற்றும் 6 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.