மட்டக்களப்பு பிரதேச செயலக பிரிவில் போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு மற்றும் குருபூஜை நிகழ்வு.














மாகாண பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக உதவி மாவட்ட செயலாளரின் ஆலோசனைக்கமைய பிரதேச செயலாளரின் வழிகாட்ட லில் 2026.03.08 ஆந் திகதி கிரான்குளம் இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலையிலும் செல்வாநகர் கிழக்கு ஒரு குழந்தைக்கு கல்வி புகட்டு இந்து நரசிம்ம அறநெறி பாடசாலையிலும் கீழ்வரும் செயற்பாடுகள் நடைபெற்றன.

*பஞ்சபுராணம் இசைத்தல்
*நந்திக்கொடி ஏற்றி வைத்தல்
*அறநெறி கீதம் இசைத்தல் 
*மாணவர் நற்சிந்தனை 
*ஆசிரியர் நற்சிந்தனை 
*யோகாசனப் பயிற்சி,மூச்சுப்பயிற்சி
தியானப்பயிற்சி என்பன எமது இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திருமதி மேகலா முகுந்தன், திருமதி குமுதினி பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. 

அத்தோடு போதைப்பொருள்  முற்தடுப்பு உத்தியோகத்தர் திரு சண்முகநாதன் கணேசதாஸ் அவர்களால்  எமது மாணவர்களுக்கு மகிழ்ச்சியான குடும்பம் எனும் தொனிப்பொருளில் பல நல்ல விடயங்களை சொல்லிக்கொடுத்து போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான அட்டைப்படமும் வழங்கி வைத்தார்.

அத்துடன் எமது அறநெறி பாடசாலையில் திருவள்ளுவர் குரு பூசையும்  சிறப்பாக இடம்பெற்றது.