வைத்தியசாலையில் சிரமதானம் .

 









காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில்,  காரைதீவு பிரதேச வைத்தியசாலையில்  பாரிய சிரமதானம்  ஒன்று நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டது.

 
வைத்தியசாலை பொறுப்பு அதிகாரி மருத்துவர் அஜந்தா சுரேஸ் விடுத்த வேண்டுகோளையேற்று பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன் இந்த நடவடிக்கையை தமது ஊழியர்கள் சகிதம் மேற்கொண்டார்.

அதனால் வைத்தியசாலையின் உள் வெளி சூழல்கள் சுத்தமாக்கப்பட்டன.