காசநோய் என்றால் என்ன ? காசநோய் என்பது மிகவும் ஆபத்தான தொற்று நோயாகும். இதனைக் கண்டறிவது மிகவும் கடினமானதாகும். எனவே, இதன் அறிகுறிகளுக்கு அதிகபடியான கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். தற்போதைய சூழலில், மில்லியன் கணக்கான மக்கள் இந்த நோய்க்கு பலியாகின்றனர். மேலும், பலர் இதன் தாக்கத்தினால் இறக்கின்றனர்.
நம் நாட்டில் தினமும் காசநோய் காரணமாக இரண்டு நபர்கள் உயிர் இழக்கிறார்கள். இந்த நோயை ஒருபோதும் லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும், 30 முதல் 40 ஆயிரம் பேர் தொற்றுநோய்க்கு ஆளாகின்றனர். காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியா சுவாசிக்கும்போது நம் உடலுக்குள் நுழைகிறது. பாதிக்கப்பட்ட நபர் இருமல், தும்மல், துப்புதல் போன்ற செயல்களை செய்யும் போதும் அல்லது பேசும்போது, அவரின் உமிழ்நீரின் சிறிய துளிகள் காற்றில் வெளியேறுகிறது. இந்த உமிழ்நீரில் பல மணி நேரம் காற்றில் உயிர்வாழக்கூடிய காசநோய் பாக்டீரியா உள்ளது, இது மற்றொரு நபரின் உடலில் நுழைந்து புதிய நோய்தொற்றை ஏற்படுத்துகிறது.
மைக்கோபாக்டீரியம் காசநோய் என்னும் பாக்டீரியாவின் மூலம் காசநோய் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா நுரையீரல் வழியாக இரத்தத்தில் நுழைந்து உடலின் அனைத்து திசுக்களுக்கும் பரவுகிறது. அதாவது மூளையின் வெளிப்புற சவ்வு, குடல், வெளியேற்ற மற்றும் இனப்பெருக்க உறுப்புகள், மூட்டுகள், நிணநீர் சுரப்பிகள் போன்ற ஏராளமான உறுப்புகளுள் இந்த பாக்டீரியல் தொற்று பரவுகின்றது.
இந்த பாக்டீரியாக்கள் அசுத்தமான நீர் மற்றும் மண்ணில் காணப்படுகின்றன. இந்தத் நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு காற்று வழியாக பரவுகிறது.
மோசமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் காரணமாக ஒரு நபருக்கு காசநோய் ஏற்படக்கூடும். இதன் காரணமாக, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்து பாக்டீரியா உடலைத் தாக்கத் தொடங்குகிறது. இந்த தொற்று சுற்றுப்புறங்களில் பரவுகிறது, காசநோய் பாக்டீரியா இருட்டில் வளர்கிறது. இந்த நோய்க்கு வயது வரம்பு இல்லை, இது அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு காசநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மற்றும் எய்ட்ஸ் நோயாளிக்கு காசநோய் தொற்று விரைவாக பரவுகிறது. புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களும் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில், புகைபிடிக்கும் போது பாக்டீரியா உடலில் நுழைகிறது.
- காசநோய், வாய்வழி புற்றுநோய் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி அனைத்தும் ஒரே போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளன.
- புற்றுநோயில், பாதிக்கப்பட்ட நபரின் வாயிலிருந்து இரத்தம் வெளியேறி உடல் எடை குறைகிறது. இதில் பெரும்பாலும் காய்ச்சல் இருக்காது.
- மூச்சுக்குழாய் அழற்சியில், பாதிக்கப்பட்ட நபருக்கு சுவாசிப்பதில் சிரமம் உள்ளது மற்றும் சுவாசிக்கும்போது மூச்சுத்திணறல் ஒலி கேட்கப்படுகிறது.
- காசநோய் உள்ள நபருக்கு சுவாசிப்பதில் சிரமம் இல்லை. எனினும், இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளது.
- இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தால், அது காசநோயின் அறிகுறியாகும்.
- காசநோய் என்பது ஒரு தொற்று நோயாகும், இது படிப்படியாக பாதிக்கப்பட்ட நபரை பலவீனப்படுத்துகிறது. நுரையீரலில் காசநோய் உண்டாவது மிகவும் பொதுவானதாகும், எனினும் இது மூளை, கருப்பை, வாய், கல்லீரல், சிறுநீரகம், எலும்புகள், தொண்டை போன்ற உடலின் எந்தப் பகுதிக்கும் எளிதில் பரவுகிறது.
- காசநோய் உள்ள நபர் இருமல், காய்ச்சல் மற்றும் பசியின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்.
- சளியில் இரத்தம் வெளியேறுவது, இருமல், மற்றும் இரவில் அதிக காய்ச்சல் ஏறபடுவது காசநோயின் அறிகுறியாகும்.
- குளிர்காலத்தில் நிறைய வியர்த்தல் மற்றும் இருமும் போது மார்பில் வலி போன்றவை காசநோயின் அறிகுறிகளாகும். இது போன்ற அறிகுறிகளை நீங்கள் எதிர்கொண்டால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகவும்.
- காசநோய் சிகிச்சைக்கு, முதலில் மார்பில் எக்ஸ்ரே (X – ray) எடுக்கப்படுகிறது, மற்றும் உமிழ்நீர் ஸ்பூட்டம்(சளி) ஆகியவை பரிசோதிக்கப்படுகிறது.
- காசநோய்க்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன, இதில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் மருந்துகள் உள்ளன.
- நோயாளிக்கு 6 முதல் 9 மாதங்கள் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- மருந்து சரியாக உட்கொள்ளாவிட்டால், உடலில் தொற்று அதிகரிக்கும். எனவே, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- காசநோய் சிகிச்சையின் போது, நோயாளி சத்தான உணவுகளை உட்கொண்டு, புகைபிடித்தல் மற்றும் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- அக்ரூட் பருப்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. எனவே, இதனை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- கஸ்டர்ட் ஆப்பிள் (ஷெரீஃபா) நோயாளிக்கு மிகவும் நன்மை அளிக்கிறது. மேலும், கஸ்டார்ட் ஆப்பிளின் சாற்றை குடிக்கவும். .
- ஆரஞ்சு சாப்பிடுவது தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துகிறது.
- வாழைப்பழத்துடன், இளரீரைக் கலந்து குடிப்பதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது.
- ஒரு கப் வெங்காய சாற்றில் , பெருங்காயம் கிள்ளிப் போட்டு குடிக்கவும்.
- 150 கிராம் தேனில் சிறிது சர்க்கரை மற்றும் நெய் கலந்து, நாள் ஒன்றுக்கு இரண்டு முறை இதை உட்கொள்ளுமாறு நோயாளியை அறிவுறுத்துங்கள்.





