அக்கரைப்பற்று பனங்காடு பாலத்துக்கு அருகில் ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 


 

 

 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்துக்கு அருகில் ஆற்றில்  ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (18) காலையிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் 52 வயதான சாமித்தம்பி திவ்வியராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சடலம் நல்லடக்கத்துக்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 செல்வி வினாயகமூர்த்தி