வரதன்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இப்தார் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (04) மாலை இடம் பெற்றது.
கிராத் ஓதலுடன் இப்தார் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன், இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்
இப் புனித ரமழான் மாதத்தில் அன்பையும் பாசத்தையும் சகோதரத்துவத்தினையும் மேலும் வலுச்சேர்க்கும் முகமாக இந்நிகழ்வு அமையப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரி.எம்.ரிஸ்வி அவர்களினால் புனித ரமழான் விசேட உரையின் போது நோம்பின் மகத்துவம் தொடர்பான கருத்துக்களை தெளிவூட்டினார்.
இந்நிகழ்வில் மெளலவி ருசைதுர் ரகுமான், மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.ஏப்.ஏ. சனீர், தேசிய உரச் செயலக பிரதி பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுதின், அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எ.எஸ்.எம். சியாத், மாவட்ட தகவல் தொடர்பாடல் பிரிவின் உதவி பணிப்பாளர் சின்தா முபாஸ், ஓய்வு பெற்ற பிரதம கணக்காளர் எம்.எஸ்.பசீர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், அங்கர் முகவர் ருசைனி பாயிஸ் மற்றும் வர்த்தக பிரமுகர்கள்
என பலர் கலந்து கொண்டனர்.
உள்ளத்தில் ஆன்மிக உணர்வை நிலைநிறுத்தி பாவமீட்சிக்கான மகத்தான காலமாக நோன்பு காணப்படுவதாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டமை சிறப்பம்சமாகும்.
இந் நிகழ்வு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.












