மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த தேசிய பாடசாலை வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி2026.03.19அன்று பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது விளையாட்டு போட்டியின் ஆரம்ப நிகழ்வாக தேசிய கோடி ஏற்றலும் , தேசிய கீதமும் இசைக்கப்பட்டது .
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிசன் உதவி பொது முகாமையாளர்
ஸ்ரீமத் சுவாமி உமா தீக்ஷானந்தஜீ மகராஜ் அவர்களின் ஆசியுரையுடன் பாடசாலை அதிபர் எஸ் தயாபரன் தலைமையில் விளையாட்டு விழா ஆரம்பமானது .
பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய பணிப்பாளர் தினகரன் ரவி கலந்து சிறப்பித்தார் .
கௌரவ அதிதியாக T.கோகுல குமாரன் மண்முனை வடக்கு பிரதேச செயலக கல்விப்பணிப்பாளர் , சிறப்பு அதிதிகளாக V.லவகுமார்
ADE-உடற்கல்வி- மட்டக்களப்பு கல்வி வலயம் , ஹரி இல்லத்தலைவர் S. சந்திரகுமார் S.சுமன் உதவி தலைவர் PSA UK BRANCH SHIVANANTHA VIDYALAYA UK-ஆகியோர் பங்கேற்றிருந்தனர்
அதனைத்தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு , சத்தியப்பிரமாணம் இடம்பெற்று ,
தொடர்ந்து மாணவர்களின் அணிநடை மரியாதை இடம்பெற்றது.
மேலும் உடற்பயிற்சி கண்காட்சியும் நிகழ்வை அலங்கரித்தது.
இதன்போது வெற்றியீட்டிய , இல்லங்களுக்கும் , மாணவர்களும் பதங்கள், வெற்றிக்கேடயங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சிவானந்தா இல்லம் அதிக புள்ளிகளைப்பெற்று வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது .





















