“பரசூட்”முறையில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் அறுவடை விழா .

 

களைநெல் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த முறையும் அதிக விளைச்சல் தரும் “பரசூட்”முறையில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் அறுவடை விழா உருத்திரபுரம் பொறிக்கடவை அம்மன் ஆலயத்திற்கு அருகில் கு.விநாயகமூர்த்தி என்ற விவசாயின் வயலில் நடைபெற்றது.


உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் நா.மகராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பா.தேவரதன் கலந்து கொண்டார்.