( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை
சட்டத்தரணிகள் சங்கத்தின் 2026/2027 ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவானது
நேற்று (18) புதன்கிழமை கல்முனையில் இடம் பெற்றது.
இந் நிர்வாகத்தில் ஒரு சில சிறிய மாற்றங்களுடன் 2025/2026 அதே நிர்வாகம் 2026/2027 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய மீண்டும் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா ஷாரிக் காரியப்பர்,
பொதுச்செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி ஏஜி. பிரேம் நவாத் ,
பொருளாளராக சட்டத்தரணி சி.ஐ.சஞ்ஜித் அஹமட் ,
உப தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித் ,
உபசெயலாளர்களாக சட்டத்தரணி எம் .ஜே.ஜாவீட் நிஷாட் , புண்ணியநாதன் துவாரகா
கணக்காய்வாளராக சட்டத்தரணி எம் எவ் எம்.சுஹால்ஸ்
நூலகராக சட்டத்தரணி சௌஃவி இஸ்மாயில்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
கல்முனை சட்டத்தரணிகள்
சங்கத்தின் பிரதிநிதிகளாக
சிரேஷ்ட சட்டத்தரணிகளான
எம் எஸ் எம்.ஜெமீல்,
ஏ.எல்.நதீர் ,
ஏ.எம்.பதிர்யுதின்,
எம்.எஸ்.ரஷாக் ,
எம்.ஷாரிக் காரியப்பர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக
சட்டத்தரணிகளான
ஏ.நிதான்சன்,பாத்திமா சுஜா,
எம்.எச்.சௌத் முகமட், எல்.ஏ.கே.மடோனா ஆகியோரும்
,ல் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
2026/2027 ஆண்டுக்கான தெரிவு போட்டியின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமை சிறப்பம்சமாகும்.









