விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கவலைக்கிடம் காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் கைது!






காத்தான்குடி  பைசல் வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான காத்தான்குடியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் அருகில் அமைந்திருந்த வடிகானுக்குள் தூக்கி வீசப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்தவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டியின் சாரதி காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

 விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்