கோறளைப்பற்றுஇ வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் தைப்பொங்கல் விழா.

 


கோறளைப்பற்றுஇ வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் தைப்பொங்கல் விழா பிரதேச செயலாளர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் பிரதேச செயலக பிரிவிலுள்ள அறநெறிப்பாடசாலைகள் மற்றும் கலை மன்ற மாணவர்களின் கலாசார பண்பாட்டு நிகழ்வு மற்றும் ஊர்வல நிகழ்வுடன் புதுக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ கோராவெளி கண்ணகியம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி கோறளைப்பற்று பிரதேச சபை பொது விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த நிகழ்வு வளாகத்தில் நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு கிராமத்தின் சமய, சமூக அமைப்புக்களின் ஒத்துழைப்பு, கலை நிகழ்வுகளுடன் இதன்போது அரங்கேற்றப்பட்டன.

கோறளைப்பற்று பிரதேசத்தின் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடனும் இடம்பெற்றது.