ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தோட்டப்பகுதிக்குச் சென்று மக்களுடன் மக்களாக கலந்துரையாடியுள்ளார்.

 

 


 

"எமது சம்பளத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், எமது பிரச்சினைகளை நேரில் வந்து கேட்டறிந்த ஒரே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தான்" என தோட்டத் தொழிலாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (11) காலை நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதி பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். 

குறித்த பகுதியில் தேயிலைக்கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அந்தப்பகுதிக்கு சென்றார். 

அப்போது தோட்டத் தொழிலாளர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றதுடன், தமது சம்பளத்தை அதிகரித்தமைக்காக நன்றியையும் தெரிவித்தனர். 

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தோட்டத் தொழிலாளர்கள்,

"எமது சம்பளத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், எமது பிரச்சினைகளை நேரில் வந்து கேட்டறிந்த ஒரே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள்தான்" எனத் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

நாட்டில் இதுவரையில் இருந்த எந்த ஜனாதிபதியும் தோட்டத்தொழிலாளர்களின் பகுதிக்குச் சென்று கலந்துரையாடியதில்லை. ஆனால் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தோட்டப்பகுதிக்குச் சென்று மக்களுடன் மக்களாக கலந்துரையாடியுள்ளார்.