வாழைச்சேனையில் கடந்த வெள்ளிக்கிழமை ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட நபர் இன்று (செவ்வாய்க்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வாழைச்சேனையில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தில் தாக்கப்பட்ட வாழைச்சேனை சேர்மன் கனகரெத்தினம் வீதியை சேர்ந்த வேலும் மயிலும் (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இதில் குறித்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
ந.குகதர்சன்





