மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் தாய் மொழி தின நிகழ்வு -2026




 































































மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின்  தாய் மொழி தின நிகழ்வு கல்லூரி அதிபர் S.தருமுதாஸ் தலைமையில்  கல்லூரி  ஒன்று கூடல் மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்றது .

(சர்வதேச தாய் மொழித்தினம் பெப்ரவரி 21-ஆம் திகதியாகும் , அன்றையநாளில் பாடசாலை விடுமுறை என்பதால் 2026.02.13 அன்று  முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது )

 
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ் பிரிவு பிரதிப்பணிப்பாளர் கலாநிதி S. மோசஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் .
ஆரம்ப நிகழ்வாக   அதிதிக்கு   மாலை   அணிவிக்கப்பட்டு  மண்டபத்துக்கு வரவேற்கப்பட்டார் .
தமிழர் பாரம்பரிய முறைப்படி மங்கல விளக்கேற்றல் , இறைவணக்கம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன்   நிகழ்வுகள் ஆரம்பமாகின.
உப அதிபர்  திருமதி N. சிவநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார் .
மாணவிகள் தமிழ் மொழியின் பழைமை, அழகு மற்றும் சிறப்பை உணர்த்தும் செம்மொழி  பாடலை  பாடி அரங்கத்தினை மகிழ்வித்தனர் .
 தொடர்ந்து மாணவி A.விக்க்ஷனாவின் கவிதை இடம் பெற்றது.
ஆசிரியை சஹானா அவர்கள்  இலக்கிய விமர்சனம்  பற்றி சொற்பொழிவாற்றினார் .
 திருமதி  T. சுதாகரன் ஆசிரியை உரை வழங்கினார் .

மாணவிகளால் சிவனின்    திருவிளையாடல்  என்ற புராண 
நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது .
தொடர்ந்து பிரதான அதிதி கலாநிதி S. மோசஸ் அவர்களின் உரை இடம் பெற்றது .
ஆசிரியர்  திருமதி  S.விக்னேஸ்வரன் நன்றியுரையாற்றினார் .
தமிழ் மொழி வாழ்த்தோடு தாய் மொழி தின நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது .

 EDITOR 

.