வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் தந்தையும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.

 


அனுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பகுதியில் குடும்ப தகராறு காரணமாக வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் தந்தையும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.
 
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் நால்வர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
 
தாயும் மூன்று பிள்ளைகளுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.