13 ஆண்டுகள் கல்வி கற்காமல் ஒரு பிள்ளை கூட பாடசாலையை விட்டு வெளியேற முடியாது-ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

 


இலங்கையில் 38,000 மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொள்ள முன்பே பாடசாலையை விட்டு வெளியேறுகிறார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பிள்ளைக்கும் 13 ஆண்டுகள் கட்டாயக் கல்வியை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் 13 ஆண்டுகள் கல்வி கற்காமல் ஒரு பிள்ளை கூட பாடசாலையை விட்டு வெளியேற முடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (27) கம்பளையில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

  

அவர்கள் குற்றங்கள் மற்றும் போதைப்பொருட்களில் தொடர்புபட்டுள்ளனர். எனவே, சாதாரண தரப் பரீட்சைக்கு முன்பே பாடசாலையை விட்டு வெளியேறுவதை நிறுத்த வேண்டும்.

சாதாரண தரப் பரீட்சைக்குப் பிறகு, அவர்களில் பெரும்பாலோர் பாடசாலையை விட்டு வெளியேறுகிறார்கள். சிலர் க.பொ.த உயர் தரத்திற்குத் தோற்றுகிறார்கள், அதில் சித்திபெற்ற பிறகு, ஒரு குழு பல்கலைக்கழகங்களுக்கு செல்கிறது.

அதுதான் நம் நாட்டின் கல்விப் பாதை. ஆனால் நாங்கள் தேர்ந்தெடுத்த கல்விப் பாதை அதுவல்ல. ஒவ்வொரு பிள்ளைக்கும் 13 ஆண்டுகள் கட்டாயக் கல்வியை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு.