மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் 117வது கல்லூரி தினம்.










மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர்   கல்லூரியின்   117வது கல்லூரி தினம் அதிபர் S.தருமுதாஸ் தலைமையில்  
கல்லூரி  முன்றலில் இடம் பெற்றது .
ஆரம்ப நிகழ்வாக  சரஸ்வதி  வழிபாட்டினை தொடர்ந்து இராமகிருஷ்ண மிஷன்  பொதுமுகாமையாளர்  ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி மகராஜ் அவர்களால் வீரத்துறவி விவேகானந்தரின் திரு உருவச்சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார் .

அதனை தொடர்ந்து விவேகானந்தா மகளிர்   கல்லூரியின் ஸ்தாபகர்களின் உருவச்சிலைகளுக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது .
கந்தப்பெருமாள் கதிர்காமத்தம்பி உடையார் அவர்களின் உருவச்சிலைக்கு அன்னாரது குடும்பம் சார்பில் வருகை  தந்த  R. முருகதாஸ் அவர்களும்,    தொ.கு .சபாபதி பிள்ளை உடையார் அவர்களின் உருவச்சிலைக்கு அன்னாரது குடும்பம் சார்பில் வருகை  தந்த  திருமதி S.திருக்குமரன் அவர்களாலும்   மாலை அணிவிக்கப்பட்டது .

   தொடர்ந்து கல்லூரி  அதிபர் S.தருமுதாஸ் அவர்களால் பாடசாலை கொடி ஏற்றப்பட்டது .

பாடசாலை கீதம்  இசைக்கப்பட்டதை தொடர்ந்து சத்தியப்பிரமாணமும்  இடம் பெற்றது .
தமிழர் பாரம்பரிய முறைப்படி மங்கல விளக்கேற்றல் , இறைவணக்கம் என்பன நிறைவுற்றதும், ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி மகராஜ் அவர்களால் ஆசியுரையும் , கல்லூரி அதிபரால் தலைமை உரையும்  வழங்கப்பட்டது .

கந்தப்பெருமாள் கதிர்காமத்தம்பி உடையார்  குடும்பம் சார்பில் வருகை   தந்த  R. முருகதாஸ் அவர்களும்,   தொ.கு .சபாபதி பிள்ளை உடையார்  குடும்பம் சார்பில் வருகை தந்த  திருமதி S.திருக்குமரன்அவர்களும் சிறப்புரையாற்றினார்கள் .

  ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி , பாடசாலை அதிபர் , ஆசிரியர் மாணவர்களால் பலூன்கள் பறக்க விடப்பட்டது

இறுதி நிகழ்வாக   விவேகானந்தா மகளிர்   கல்லூரியின்  117வது கல்லூரி தினத்தை சிறப்பிக்கும் முகமாக  கேக் வெட்டப்பட்டு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட துடன்  கல்லூரி தினம் நிகழ்வு இனிதே நிறைவுக்கு வந்தது .

 EDITOR.