அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல தவணைக் கொடுப்பனவு விரைவுபடுத்தப்படும் .

 


அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல தவணைக் கொடுப்பனவு விரைவுபடுத்தப்படும் என உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
 
முழு நாட்டையும் பாதித்த பாதகமான வானிலை காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சுமூகமாக மீண்டும் தொடங்குவதை எளிதாக்கும் நோக்கில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடந்த மாதம் 28 ஆம் திகதி அன்று செலுத்தப்பட்ட மஹாபொல தவணைக்கு மேலதிகமாக எதிர்வரும் 05ஆம் திகதி அன்று மற்றொரு மஹாபொல தவணையை செலுத்தும்.