நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள்எதிர்வரும் எட்டாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 


நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், எதிர்வரும் எட்டாம் திகதி வரை கல்வி நடவடிக்கைகளை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில்  கூட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 குறித்த கூட்டத்தின் பொதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 பல்கலைக்கழகங்களில் அனர்த்த முகாமைத்துவக் குழுக்களை அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் மற்றும் நிவாரண ஏற்பாடுகளை மேற்கொள்ளவதற்கும், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் குடும்பங்களில் ஏற்பட்ட இழப்புகளை அறிந்து கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த பட்டப்பின் கற்கைகளுக்கான பட்டமளிப்பு விழா, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாநாடு மற்றும் பொறியியல் கண்காட்சி என்பன பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.