சுகாதார ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 


தற்போதைய அனர்த்த நிலையைக் கருத்திற் கொண்டு பல்வேறு அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி, சுகாதார ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
 
அனைத்து சுகாதார ஊழியர்களும் நோயாளி பராமரிப்புக்கு இடையூறு ஏற்படாத வகையில் தங்கள் விடுமுறையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அத்துடன், காவல்துறை அதிகாரிகளுக்கான விடுமுறை இரத்து செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.