மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் பொது மக்களிடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (01) திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
அவர் இதன் போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு165000 லிட்டர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று மட்டும் 231000 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வரிசையில் நின்று பெற்ரோல் கொள்வனவு செய்வதனால் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையே ஏற்பட்டுள்ளது. இவ்வாறாக செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும் இதன் போது தெரிவித்திருந்தார்.

.jpeg)



.jpeg)





