வடக்கு, மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும்- வளிமண்டலவியல் திணைக்களம்

 


வடக்கு, மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (01) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, டிட்வா சூறாவளி புயல் காங்கேசன்துறைக்கு வடகிழக்கே சுமார் 210 கிலோ மீற்றர் தொலைவில் அட்சரேகை 11.4°N மற்றும் தீர்க்கரேகை 80.6°E க்கு அருகில் மையம் கொண்டுள்ளது.

 இது தீவிலிருந்து விலகி வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழக கடற்கரைக்கு இணையாக கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.

சூறாவளியின் தாக்கம் தீவின் வானிலையில் மேலும் குறையும். 

பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.