யாழிலிருந்து - கருவாடு உற்பத்தி செய்யும் பெண் சிறு தொழில் முயற்சியாளரான கமலினி அண்ணாத்துரை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபா50000/வழங்கி உள்ளார் /


 

அண்மையில் டித்வா புயலில் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு யாழிலிருந்து - கருவாடு உற்பத்தி செய்யும் பெண் சிறு தொழில் முயற்சியாளரான கமலினி அண்ணாத்துரை அவர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவதற்காக. அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இலங்கை வங்கி கணக்கிற்கு ரூபா 50,000.00 நிதியினை வைப்பிலிட்டு, அதற்கான பற்றுச்சீட்டின் பிரதியினை அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் கையளித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த கமலினி அண்ணாத்துரை, தம்மால் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், தொடர்ச்சியாக வழங்கவிருப்பதாகவும், இந்நிதியினை பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு வழங்குவதாகவும் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தார்.

இதன் போது இவ்வாறான பெண் சிறு தொழில் முயற்சியாளரின் முன்மாதிரியான நல்லிணக்கச் செயற்பாட்டை அரசாங்க அதிபர் பெரிதும் பாராட்டி தமது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.