பாடசாலை மாணவர்களிடையே, புகைபிடித்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில்
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பேராதனை போதனா மருத்துவமனையின்
சுவாசப்பிரிவு மருத்துவ நிபுணர் துமிந்த யசரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர்களில், 14 அல்லது 15 வயதினரிடையே , சிகரெட் புகைப்பிடிக்கும் பழக்கம் ஆரம்பித்துள்ளதாக மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இளம் வயதினரிடையே புகைபிடித்தல்,
நுரையீரல் தொடர்பான நோய்களின் அதிகரிப்பிற்கு பாரிய பங்களிக்கும் என்றும்
மருத்துவ நிபுணர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார்.





