மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது .


































அவுஸ்திரேலியாவில்  வசிக்கும்  வின்சென்ட்  மகளிர் கல்லூரியின்  பழைய மாணவியும்  , பழைய மாணவர்சங்க   அவுஸ்திரேலியா கிளையின் உறுப்பினருமான கிருஷ்ணானந்தி மகேஸ்வரன் மற்றும்  குமாரகுல சிங்கி குடும்பத்தினரும் இணைந்து சுமார் 3- மில்லியன் செலவில் பாடசாலை  வின்சென்ட்   நூலகத்தை இணைய வழி நூலகமாக்கி டிஜிட்டல் மயப்படுத்தி , நூலகம்   கணனி மயமாக்கப்பட்டு  முழுமையாக குளிரூட்டப்பட்டு  நவீனமயமான நூலகமாக வடிவமைக்க அனுசரணை வழங்கி இருந்தனர் .
கிருஷ்ணானந்தி  அவர்களின்  எண்ணக்கருவிற்கு அமைவாக  மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் ,அறிவு விருத்திக்காகவும் வினைத்திறனுள்ள  மாணவர்களை உருவாக்குவதற்குமான  உயரிய சிந்தனையின் அடிப்படையில்  டிஜிட்டல்    நூலகம் திறந்து வைக்கப்பட்டது .

பாடசாலை முதல்வர் தவதிருமகள் உதயகுமார் தலைமையில் இடம் பெற்ற நூலக திறப்பு விழாவில்   பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய கல்வி  பணிப்பாளர் தினகரன் ரவி கலந்து சிறப்பித்தார் .
கிழக்கு பல்கலைக்கழக  சிரேஷ்ட நூலகர்  ரவிக்குமார் முத்துராஜா  இந்த டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட இணையவழி சேவையை செயல்படுத்த ஆலோசனை வழங்கி பூரண ஒத்துழைப்பு வழங்கி இருந்தார் .

 நிகழ்வில் ஓய்வு நிலை அதிபர்கள் ,பாடசாலை பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள் மாணவர்கள்,  பாடசாலை  பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள் 

செய்தி ஆசிரியர்