இரு சமூகங்களுக்கிடையே பாரிய பிளவு, ஏற்பட முன் தடுத்து நிறுத்த அதிகாரிகள், மத தலைவர்கள், சமய நிறுவனங்கள் சமுக மட்ட அமைப்புகள் விரைந்து செயற்பட வேண்டும்.










துறைநீலாவணை பிரதான வீதியில் தொடரும்  குப்பை கொட்டும் அநாகரிக நடவடிக்கையினால் துறைநீலாவணை மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஆத்திரமூட்டப்படுகின்றனர்..

துறைநீலாவணைகிராமத்தின் முகப்பில் உள்ள அயல்கிராமத்தை சேர்ந்தவர்களாலே இந்த குப்பை கொட்டும் செயற்பாடு  நீண்டகாலமாக முன்னெடுக்கப்படுகிறது.

மட்டக்களப்பு கல்முனை பிரதான பாதையிலிருந்து துறைநீலாவணை கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதியில் இருமருங்கிலும் மாட்டிறைச்சி, கோழிஇறைச்சி விற்பனை கடைகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும்  வெளியேற்றப்படும் கழிவுகள் வீசப்படுகிறது.
 
துறைநீலாவணை பிரதான வீதியில் குப்பைகள் கொட்டப்படுவதால், பிரதான வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்..

தூர்நாற்றம் வீசுதல், கழிவுகளை உண்ணவரும் நாய்களினால் அச்சுறுத்தல், முதலைகளின் நடமாட்டம் வீதியில் பயணிக்கும் பயணிகள் மீது காகங்களினால் தூக்கி வீசப்படு கழிவுகள் இவ்வாறு பல அசெகரியங்களை துறைநீலாவணை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.