மிக நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த பஸ்தரிப்பிடமில்லாத பிரச்சினைக்கு தீர்வு வட்டார பிரதேச சபை உறுப்பினர்களினால் கிடைக்கப்பெற்றுள்ளது.






வாகரை ஜெயந்தியாய பிரதேசங்களிலிருந்து தூர மற்றும் குறுகிய பிரயாணங்களை மேற்கொள்ளும் பிரதேச மக்களும்    பிரயாணிகள், பாடசாலை ஆசிரியர்களும் மிக நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த பஸ்தரிப்பிடமில்லாத பிரச்சினைக்கு தீர்வு வட்டார பிரதேச சபை உறுப்பினர்களினால் கிடைக்கப்பெற்றுள்ளது. 

வெயில், மழை காலங்களில் எதிர்நோக்கி வந்த அசெளகரியங்களைக் கவனத்திற்கொண்டு கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எம்.தாஹிர் மற்றும் ஜே.எம்.முனாஸ் ஜேபி ஆகியோர் வாகரை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க பஸ்தரிப்பிட நிர்மாணப்பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. 

இதன் மூலம் பிரதேச மக்களும் பிரயாணிகள், பாடசாலை ஆசிரியர்களும் பெரிதும் நன்மையடைவர். 

தமது வேண்டுகோளையேற்று பஸ்தரிப்பிடங்களுக்கான அனுமதியையும் நிதியொதுக்கீட்டையும் பெற்றுக்கொடுத்த கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச சபையின் தவிசாளர் க.தெய்வேந்திரன் மற்றும் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் ஆகியோருக்கு பிரதேச மக்கள் சார்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

அத்துடன், குறித்த நிர்மாணப்பணிகளை பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரும் பிரதேச செயற்பாட்டாளர்களுடன் நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டதுடன், பணிகள் செவ்வனே நிறைவேற்றப்பட்டு துரிதகதியில் மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்ட வேண்டுமென்ற வினயமான வேண்டுகோளையும் விடுத்தனர்.

நீண்டகாலத்தேவையை நிறைவேற்றித்தந்தமைக்காக பிரதேச சபை உறுப்பினர்கள் இருவருக்கும் பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு  இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் கிழக்கு மாகாண நட்சத்திர விடுதிகள் உரிமையாளர் சங்கமும் இணைந்து கடற்கரை சிரமதானம்.   |

 

  ந.குகதர்சன்