மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலத்தின் மாடி தோட்டத்தில் புதினா கன்றுகள் அறுவடை.















மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலத்தின் மாடி தோட்டத்தில் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களினால் நடுகை செய்யப்பட்ட புதினா கன்றுகளின் அறுவடை நிகழ்வானது நிருவாக உத்தியோகத்தரின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் இன்று (01.08.2025) இடம்பெற்றது.

இதன்போது  களுவாஞ்சிகுடி விவசாய திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர் ஜனாப் A I  றிஃகி  அவர்களினால் புதினாவின் பயன்கள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பாக அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் அலுவலக உத்தியோகத்தர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர் உட்பட அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.