மட்டக்களப்பு முனைக்காட்டைச்சேர்ந்த தாந்தியான் சிதம்பரப்பிள்ளை தொகுத்துவழங்கும் வாழும் வசந்தன் நூல்வெளியீட்டுவிழா எதிர்வரும் 03.08 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02மணிக்கு மகிழடித்தீவு பிரதேச கலாச்சார மண்டபத்தில் தா.சிதம்பரப்பிள்ளை தலைமையில் நடைபெறவுள்ளது.
அதிபர் வ.துசாந்தனின் வரவேற்பு உரையுடன் ஆரம்பமாகவுள்ள நிகழ்வில் முதன்மை அதிதிகளாக கிழக்குப்பல்கலைக்கழக பேராசிரியர் சு.சிவரெத்தினம், தேசிய கல்விநிறுவக தமிழ்பிரிவுப்பணிப்பாளர் கலாநிதி முருகு தயாநிதி ஆகியோரும் ,சிறப்பு அதிதிகளாக கிழக்குப்பல்கரலக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்க.மோகனதாசன், செங்கதிரோன் எந்திரி த.கோபாலகிருஸ்ணன் (தலைவர் கண்ணகி கலை இலக்கியக்கூடல்) கலந்துகொள்ளவுள்ளனர்.
நூல் அறிமுகவுரையினை சின்னத்தம்பி குருபரன் நி கழ்த்தவுள்ளார். பிள்ளையார் வசந்தன், முசுற்றுவசந்தன், கூவாய் குயில் வந்தன், அனுமார் வசந்தன் போன்ற வசந்தன்களும் ஆடல்நிகழ்வாக இடம்பெறவுள்ளது.
முதற்பிரதியினை முன்னாள் கொத்தணி அதிபர் ச.சந்திரசேகரம் பெறவுள்ள இந்நிகழ்வில் வசந்தன் கலைச்செம்மல் பாலிப்போடி நல்லதம்பி விசேட கௌரவத்தினையும் பெறவுள்ளார்.