சுகாதாரத் துறையில் லஞ்சம் ஊழல் அற்றவர்களை சுகாதார அமைச்சு நிச்சயம் பாதுகாக்கும்







 கிழக்கு மாகாண பிராந்திய வைத்தியசாலைகளுக்கான முக்கிய தேவைகளுக்கான நிதி உதவிகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மாகாணத்திற்கும் மட்டக்களப்புக்கும் அதிக நிதிகள் ஒதுக்கப்படும் சுகாதார அமைச்சர்

 மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்  கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு  தெரிவித்தார்
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு   அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதல் தடவையாக விஜயம்  செய்த சுகாதார  அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயத்தீச  மாவட்ட பிராந்திய சுகாதார சேவை அலுவலகத்துக்கு விஜயம் செய்து மாவட்டத்திலுள்ள பிரதேச வைத்தியசாலைகளின் தற்போதைய நிலைமைகள் பற்றி கலந்துரையாடலில் கலந்து கொண்டார்

 மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர் முரளீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
 இவ்நிகழ்வில் பிரதேச வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டு தங்களது முக்கிய தேவைகள் பற்றி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்

எதிர்வரும் காலத்தில் கட்டம் கட்டமாக அவை நிறைவேற்றி தருவதாக அமைச்சர் இங்கு தெரிவித்தார்

 இதேவேளை கிழக்கு மாகாண சுகாதாரத் துறையினரால் அமைச்சர் இங்கு கௌரவிக்கப்பட்டார்
அமைச்சரின் இந்த விஜயத்தின் போது மாகாண சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகள் பிரதேச வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர்கள் பிராந்திய சுகாதாரப் பணிமனையின் ஊழியர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 வரதன்