முதியோருக்கான ஜூலை
மாதத்துக்கான நிவாரண கொடுப்பனவுகள் இன்று (30) முதல் பயனாளிகளின் வங்கிக்
கணக்குகளில் வரவு வைக்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
600,768 பயனாளிகளுக்காக, 3004 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதியோர் கொடுப்பனவுகளைப் பெற்றுக்
கொள்ளும் பயனாளிகள் இன்று முதல் அவர்களின் அஸ்வெசும வங்கிக்
கணக்குகளிலிருந்து தங்களின் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என
நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.