குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரத்தைச்
சேர்ப்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும்
மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பிறந்து
2 நாட்களே ஆன சிசு ஒன்று வயல் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.