மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் தாகசாந்தி நிகழ்வு.



கிழக்கிழங்கையின் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இராமாயண இதிகாச வரலாற்றுச் சிறப்புமிகு மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்றைய தினம் (02) மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

அதனை முன்னிட்டு மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் தாகசாந்தி வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா தலைமையில் இடம் பெற்ற தாக சாந்தி நிகழ்வில் 2000 இற்கும் அதிகமான பக்தர்களுக்கு  குளிர்பாணம் வழங்கி வைக்கப்பட்டதுடன், 1500 இற்கு மேற்பட்ட பத்தர்களுக்கு தலைவரின் சொந்த நிதியிலிருந்து பகல் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன்,  இந் நிகழ்வுகளில் மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

புதிய நிர்வாகத்தின் முதலாவது சமூகநல செயல்பாடாக  மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குறித்த தாகசாந்தி நிகழ்வானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.