இலங்கையர்களுக்கான கொரிய வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கொரியத் தூதுவருக்கும் பிரதி அமைச்சர்
அருண் ஹேமச்சந்திராவுக்கும் இடையே நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது
இந்த விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை தொழிலாளர்களுக்கு தற்போது
வழங்கப்படும் கொரிய வேலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் சுற்றுலாத்
துறையை மேம்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.