யாழ்ப்பாணம்
செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம்
பாதயாத்திரீகர்கள் நேற்று (24) செவ்வாய்க்கிழமை 56வது நாளில் கதிர்காம
கந்தன் ஆலயத்தை சென்றடைந்தனர்.
.
யாழ்.
செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கடந்த மே மாதம் 1 ஆம் தேதி புறப்பட்ட
ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் 56தினங்களில் யாழ்ப்பாணம்
கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை அம்பாறை மொனராகலை ஆகிய ஆறு
மாவட்டங்களைக் கடந்து நேற்று காலை செல்லக்கதிர்காமத்தில்
பிரவேசித்துள்ளனர்.
அவர்கள் நாளை 26 ஆம் தேதி கொடியேற்றத்தில் பங்கேற்பாளர்கள்.
( வி.ரி.சகாதேவராஜா)