தந்தை செல்வாவின் உருவச்சிலை தமிழ் இன விரோத சக்திகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.

 


மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. 
 
தந்தை செல்வாவின் உருவச் சிலையின் தலைப்பகுதி, உடைத்து வேறாக்கப்பட்டமை இன்று காலை அவதானிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை முக்கியஸ்தர்களால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, மன்னார் காவல்துறையினரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.