மட்டக்களப்பு - ஆரையம்பதி பகுதியில் பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு 3 வயதுக் குழந்தை உயிரிழந்தது.

 



மட்டக்களப்பு - ஆரையம்பதி பகுதியில் பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு 3 வயதுக் குழந்தை உயிரிழந்தது. 
 
ஆரையம்பதி பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண், தனது 3 வயதுக் குழந்தையை இன்றையதினம் தொழிற் தளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். 
 
அங்கிருந்த பேருந்து ஒன்று பின்திசை நோக்கி நகர்ந்தபோது, அதன் சில்லுக்குள் அகப்பட்டு குழந்தை உயிரிழந்ததாக, காவல்துறையினர் தெரிவித்தனர். 
 
ஆரையம்பதி முதலாம் பிரிவு - காளிக்கோவில் வீதியைச் சேர்ந்த ஆண் குழந்தை ஒன்றே உயிரிழந்தது. 
 
குழந்தையின் சடலம் ஆரையம்பதி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 
 
சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.