மட்டக்களப்பு-மரப்பாலம் சீயோன் தேவாலயத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

 


மட்டக்களப்பு-மரப்பாலம் சீயோன் தேவாலயத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. முரளிதரன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மரப்பாலம், கரடியனாறு, கித்துள், ராஜபுரம், மாவளயாறு மற்றும் சின்ன புல்லுமலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 176 மாணவச்சிறுவர்களுக்கு இப்பொருட்கள் கையளிக்கப்பட்ட தாக முகாமையாளர் ஜோசப் அஸ்லி தெரிவித்தார்..

போதகர் ரொபட் டினேஷ் தலைமையில் மரப்பாலம் சீயோன் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர்

கே. கோபாலரத்தினம், கிராம சேவகர் ரீ. ஜெயகாந்த் ஆகியோர் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அதிதிகள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.