பாலியல் துஷ்பிரயோகத்தால் தன் உயிரை மாய்த்த மாணவி ஹம்சிகாவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு நீதி வேண்டி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.










 நீதிவேண்டியும் இனியும் இவ்வாறான துஷ்பிரயோகம் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யக் கோரியும் பாடசாலைகளில் உளவியல் கட்டமைப்பை வலிமைப்படுத்தவும், நீதி கோரி [11.05.2025] இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காந்தி பூங்காவளாகத்தின் முன் நடைபெற்றது.

என் மௌனம் என் குற்றமல்ல உன் செயல்தான் குற்றம் மௌனத்தை காப்போம் என பாலியல் துஷ்பிரயோகத்தால் தன்னுயிரை மாய்த்த டில்லி ஹம்சிகாவுக்காக வேண்டி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்,  மாணவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், தண்டனை இல்லை, என்பதே குற்றவாளியின் தைரியம், பரிதாபம் வேண்டாம் பாதுகாப்பு வேண்டும், வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பிய வாறும் ஒரு மணி நேர ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

பெண்கள் அமைப்புகள் குறித்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது. இதில் பெண்ணியம் சார்ந்த சமூக செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.