மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக இரத்தான நிகழ்வு மகிழடி த்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

 



மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக இரத்தான நிகழ்வு (19.05.2025) திங்கட்கிழமை மகிழடி த்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படும் இரத்த வகைகளின் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் ஆண்டு தோறும் பிரதேச செயலகம் ஒழங்கமைத்து வழங்கி வரும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு இரத்த வங்கியினர் கலந்துகொண்டு குறித்த குருதியை கொடையாக பெற்றுக் கொண்டனர்.

இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேசத்திற்குட்பட்ட இளைஞர் யுவதிகள் பங்குபற்றி குருதியை கொடையாக வழங்கி வைத்தனர்.

இதன் போது 61பேர் தமது குருதியை கொடையாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.