பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை.

 


பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது அரசாங்கத்தின் கடமை என கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் அனுநாயக்க கோட்டாபிட்டியே ராகுல தேரர் குறிப்பிட்டார்.

இன்று ஹிபன்கண்டே சத்தாசிறி தேரருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டில் பௌத்த பிக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடம் பௌத்த விகாரைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடம் அவ்வாறே பேணப்பட வேண்டும் என அவர் கூறினார்.

அதே இடம் பேணப்படாவிட்டால் ஒரு சந்தர்ப்பத்தில் பௌத்த மக்கள் பௌத்த சாசனத்தை காப்பாற்ற முன்னே வருவார்கள் என தான் நம்புவதாக அவர் கூறினார்.