இந்த ஆண்டில் 944 விபத்துகளில் 1,007 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .

 


இந்த ஆண்டில் இதுவரை இடம்பெற்ற 944 விபத்துகளில் 1,007 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்றைய தினம்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார் .

இதன்போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும்  கூறுகையில்,

விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்காக மதுபோதையில் வாகனம் ஓட்டுவோரைக் கைது செய்வது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவோரைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்வதாகத் தெரிவித்தார். 

அதன்படி, ஜனவரி 1 முதல் மே 18 வரையிலான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 26,413 பேர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன் போது தெரிவித்தார்.